tamilnadu

img

அறம் தொலைக்காட்சி தொடக்க விழா அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.22- திருச்சி சங்கம் ஓட்டலில் புதனன்று அறம் தொலைக்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொலைக் காட்சியின் நிறுவன தலைவரும், விடு தலை சிறுத்தை கட்சியின் வணிக அணி மாநில துணைச் செயலாளருமான ராஜா தலைமை வகித்தார். அச்சு ஊடக மைய மாநில துணைச் செயலாளரும், அறம் தொலைக்காட்சியின் நிறுவன தலை வருமான ரமேஷ்குமார் வரவேற்றார். விழாவை திமுக முன்னாள் அமைச் சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் இயக்கு னர்கள் பாக்யராஜ், சற்குணம், நடிகர் விமல், மனோபாலா, மன்சூர்அலி, ஸ்ரீகாந்த், வையாபுரி, மதன்பாபு, விதார்த், தம்பிராமையா, நடிகைகள் ஜெனிபர், ஹாசினி, மிஸ்மியா, சித்ரா, சொப்னா, திரைப்பட பாடலாசிரியர் விஜய், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி பிரபாகரன், அரசு, நிர்வாகி கனிஅமுதன், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வணி கர்கள், அறம் அறக்கட்டளை நிர்வாகி கள், ஊழியர்கள், உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அறம் தொலைக்காட்சி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு செய் யப்படுகிறது. அறம் தொலைக்காட்சி தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை நிறுவனர்கள் ராஜா, ரமேஷ்குமார் தலை மையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.  

;