தஞ்சாவூர், மே 14-அரசு மருத்துவமனைகளில் பிறப்பு மற்றும் இறப்புக்கு கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த திருவிடைமருதூர் அருகே ஆரலூர் பகுதியைச் சேர்ந்த கமல்ஹாசன்-சிநேகா தம்பதியின் பெண் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மருத்துவமனை ஆய்வுக்கு வந்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் அ.காந்தி வழங்கினார். முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர். அரசு மருத்துவமனைகளில், குழந்தை பிறந்து வீடு திரும்பும், ஓரிரு நாட்களில் பிறப்பு சான்றிதழ் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.