திருச்சிராப்பள்ளி:
திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கசாவடியில் சமயபுரம் ஒத்தகடையை சேர்ந்தஆறுமுகம் (64), குமரக்குடியை சேர்ந்த செல்லையா (45)ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தால் கடந்த 22.7.20 அன்று சுங்கசாவடியில் நடைபெற்ற விபத்தில் ஆறுமுகம் (64), செல்லையா(45) ஆகியோர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்திற்கு காரணமான சுங்கசாவடி நிர்வகத்தினர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமையில் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் சிபிஎம் கட்சியினர் செவ்வாயன்று சுங்கசாவடி அருகில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை விளக்கி சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத்ஆகியோர் பேசினர். உண் ணாவிரத போராட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.