tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்க!

தரங்கம்பாடி, மே 21-நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் நகர், புறநகர்வட்ட மாநாடு சங்கத்தின் புறநகர் தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, மாவட்டப் பொருளாளர் பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், கோவிந்தராஜன், திருமாறன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். மாநாட்டில் மயிலாடுதுறை நகரத் தலைவராக ராமதாஸ், துணைத் தலைவர்களாக ராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி, கணேசன், செயலாளராக விஸ்வநாதன், இணைச் செயலாளராக நீலா, அன்பழகன்,சிங்காரவேலன், பொருளாளராக ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ராயர், சாரங்கபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மயிலாடுதுறை புறநகர் வட்டத் தலைவராக நாகராஜன், துணைத் தலைவர்களாக குமரவேலு, சரவணன், கண்ணப்பன், செயலாளராக ஜெகத்ரட்சகன், இணைச் செயலாளராகதண்டபாணி, சுப்ரமணியம், கௌசல்யா, பொருளாளராக முகுந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக நாகராஜன், கிருபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும். காவிரி டெல்டாபகுதியை சீரழிக்கும் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.