tamilnadu

img

பிருந்தாவன் பள்ளி மாணவர் சிறப்பிடம்

தஞ்சாவூர் மே.05-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய 371 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர் நிரஞ்சன் பாராட்டப்பட்டார். விழாவில் மாணவர் நிரஞ்சனை பள்ளி தாளாளர் சாமிநாதன், செயலாளர் சரவணன், பள்ளி இயக்குநர்கள் ராமையா, கோபாலகிருஷ்ணன், ரெத்தினக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

;