tamilnadu

img

போக்குவரத்துக்கு பயனற்ற பொக்கன்விடுதி - களத்தூர் சாலை: எப்போது சீரமைக்கப்படும்?

தஞ்சாவூர், நவ.15-  போக்குவரத்துக்கு பய னற்ற வகையில் உள்ள பொக்  கன்விடுதி - களத்தூர் ஆற்  றங்கரை சாலையை சீர மைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தின் வழியாக  சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் களத்தூர் ஆற்றுப் பாலத்தின் இணைப்பு சாலை செல்கிறது.  இந்த சாலையில், புதுப்  பட்டினம் 1-ஆம் நம்பர் கிளை வாய்க்கால் கரையில் பல  வருடங்களுக்கு முன்பு அமைக் கப்பட்ட தார்ச்சாலை உள் ளது. திருச்சிற்றம்பலம் மற்  றும் பேராவூரணி செல்லும் பொதுமக்கள் மற்றும் மாண வர்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். மேலும், விவசா யப் பணிகளுக்கும் இந்தச்  சாலை முக்கிய போக்கு வரத்து வழித்தடமாக உள் ளது. தற்சமயம் இந்தச் சாலை சேதமடைந்து குண்டுங்குழி யுமாக காணப்படுகிறது.  தொடர்ந்து பெய்து வரும்  மழையால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கியிருப்ப தால், இரவு நேரங்களில் இச்  சாலை வழியாக செல்பவர் கள் பள்ளம் இருப்பது தெரி யாமல் விபத்துக்கு உள்ளா கின்றனர். எனவே பொக்கன் விடுதி தெற்கு - களத்தூர் புதுப்பட்டினம் 1 ஆம் நம்பர் வாய்க்கால் கரையில் செல்  லும் சேதமடைந்த தார்ச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்  கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.