சீர்காழி, நவ.15- ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் சிறந்த நூல கருக்கும், சிறந்த வாசகர் வட்டத்திற்கும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவுப் பரிசு வழங்கப் பட்டு வருகிறது. இவ்வாண்டு விழா சென்னை சாந்தோம் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்வாண்டிற் கான நாகை மாவட்டத்தின் சிறந்த நூலக வாசகர் வட்ட ஆர்வலருக்கான பரிசு சீர்காழி கிளை நூலக வாச கர் வட்டத்தின் தலைவர் செம்மலர் சி.வீரசேனனுக்கு வழங்கப்பட்டது. இப்பரிசினை சென்னை யில் நடைபெற்ற குழந்தை கள் தின விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டைய னும், மீன் வளத்துறை அமைச் சர் ஜெயகுமாரும் இணை ந்து வழங்கினர். வாசகர் வட்டத் தலைவர் வீரசேனன், மாவட்ட நூலகர் இராஜேந் திரன் மற்றும் கிளை நூலகர் விஜய் ஆகியோர் கூட்டாக பரிசுக்கான கேடயத்தைப் பெற்றுக் கொண்டனர். பரிசு பெற்ற வாசகர் வட்டத் தலை வர் வீரசேனனுக்கு வரும் 18-ல் சீர்காழியில் நடைபெறும் தேசிய நூலக வார விழா வில் சீர்காழி வாசகர் வட்ட உறுப்பினர்கள் பாராட்டு விழா நடத்த இருக்கின்றனர். சொந்தக் கட்டடம் சீர்காழி நூலகம் வாட கைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டடம் இல்லாமலேயே சிறந்த வாசகர் வட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவே சொந்தக் கட்ட டத்தில் இயங்கினால் சிறப் பாக செயல்படும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது. டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் பிறந்த மண்ணில் சொந்த நூலகக் கட்டடத்தினை தமிழக அரசு விரைவில் கட்டித் தர வேண் டும் என்பதே சீர்காழி வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.