நாகப்பட்டினம், ஜூன் 30- நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ.பள்ளி, புனித அந்தோனியார் பள்ளி, நாகூர், நாகைத் தேசியப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1545 மாணவ மாணவியருக்கு ரூ.1கோடியே, 89 லட்சத்து, 61 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மடிக்கணினி களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி னார். நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் வெளியே வந்ததும் இதுவரை மடிக்கணினி வழங்க ப்படாத மாணவ- மாணவியர் அமைச்சரின் வாகனத்தை மறித்துத் தங்களுக்கு மடிக்க ணினி வழங்க வேண்டும் எனக் கேட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கி விரட்டியடித்தனர்.