திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துமனைக்கு அவரது காலத்தில் பலகோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய மருத்துவ பிரிவுகள் தொடங்கப்ப ட்டன. மேலும் பல நவீன இயந்திர ங்கள் வாங்கப்பட்டு நோயாளிகளின் பய ன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் இந்த மருத்துவமனைக்கு தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மண்ணச்ச நல்லூர், லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஸ்ரீரங்கம் அழகிரி புரம் பகுதியைச் சேர்ந்த வசந்தி(45) என்பவர் கடுமையான காய்ச்சல், தலைச்சுற்றல், உடல்வலியுடன் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவ மனைக்கு வந்தார். அப்போது அங்கு மரு த்துவர் இல்லை. அங்கிருந்த ஓரிரு செவி லியர்கள் மட்டும் அவரை பரிசோதிக்கா மல் ஊசி போட்டுவிட்டு மாத்திரை எழுதி கொடுத்துள்ளனர். மாத்திரை வழங்கும் இடத்தில் யாரும் இல்லாததாலும், சரோஜாவுடன் வந்திருந்த உறவினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் நோயாளியை பரிசோ திக்காமலும், டாக்டரிடம் ஆலோசனை கேட்காமலும் ஊசி போடுகிறீர்கள், மாத்திரை எழுதி கொடுக்கிறீர்கள், டாக்டரும் இல்லை. இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று சத்தம் போட்டனர். இதனையடுத்து செவிலியர்கள் நீங்கள் இந்த நோயாளியை இங்கேயே அனுமதியுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர். அதற்கு சரோஜாவின் உறவினர்கள் மரு த்துவர் இல்லாததாலும், சரிவர பரிசோ திக்காமல் சிகிச்சை அளிப்பதாலும் எங்க ளுக்கு இந்த அரசு மருத்துவமனையின் மேல் நம்பிக்கை வரவில்லை. எனவே தனியார் மருத்துவமனைக்கு செல்கி றோம் என்று கூறி அங்கிருந்து வெளி யேறினர். இதைப்பார்த்த அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளி ஒருவர், நான் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கால் வலிக்காக இங்கு வந்தேன். உடனே என்னை இங்கு உள்நோயாளியாக அனுமதித்து வெளியே சென்று ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் செய்து வர சொன்னார்கள். மேலும் எனது அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை ப்படுகிறது. இங்கு ரத்தம் இல்லை. வெளியே சென்று தனியார் ரத்த வங்கி யில் ரத்தம் வாங்கி வாருங்கள் என கூறி னர். நானும் ரத்தம் வாங்கி கொடுத்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் எனக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதுகுறித்து இந்த அரசு மருத்துவ மனையில் உள்ளவர்கள் முறையான பதிலை சொல்வதில்லை. அரசு மருத்து வமனை இந்த லட்சணத்தில் இரு ந்தால் எங்களை போன்ற ஏழை, எளிய வர்கள் எங்கு போவார்கள் என்றார். இகுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா கூறுகையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அரசு பல கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், எவ்வித முன்னேற்றமும் காணப்படாமல் உள்ளது. மருத்துவர்கள் சரிவர பணியில் இல்லாததாலும், முறையாக பதில் சொல்லாததாலும் மேலும் சிகிச்சை அளிக்காததாலும் இங்கு வரும் நோயாளிகள் பெரும் அவதி க்குள்ளாகின்றனர். இதுகுறித்து பல முறை புகார்கள் அளித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. மீண்டும் இதே நிலை நீடிக்கி றது. இதனை கண்டித்து சுகாதாரத்துறை அமைச்சர் இங்கு வந்து இந்த மருத்துவ மனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம் என்றார். அப்போது மாநகர் மாவட்டப் பொருளா ளர் ஜெய்குமார் உடனிருந்தார்.