tamilnadu

img

வேலைவாய்ப்பு, வீட்டு வசதி கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16- திருச்சி ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சி யர் சிவராசு தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பின் திருச்சி மத்திய துணை கிளை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தொவித்திருந்த தாவது: பார்வை மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ 1000த்திலிருந்து ரூ 3000 உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சுயவேலை வாய்ப்பு தொடங்க ஏதுவாக மாநகராட்சி, நக ராட்சி மற்றும் உள்ளாட்சியில் உள்ள கடைகளை குறைந்தபட்சம் 2சதவீதம் ஒதுக்கீடு செய்து மானியத்தோடு கூடிய வட்டியில்லா கடனையும் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிக ளுக்கும் இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ்(பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, முதலமைச்சர் வீட்டு வசதி திட்டம்) திட்டங்களிருந்து இலவசமாக வீடுகள் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதேபோன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் 25க்கும் மேற்பட்டோர் தனித்தனியே தங்களது மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.