மன்னார்குடி, மே 3-மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளி இந்தாண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி கண்டுள்ளது. இப்பள்ளி மாணவி தி.பாவிகா 500-க்கு 483 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்கிறார். அ.க.மகிமா, ரா.மந்ரா இருவரும் தலா 477 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். சி.சுபாஷினி 474 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மன்னார்குடி நகர கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர் எம்.ஆர்.வெங்கட்ராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். கடந்த இருபத்திரெண்டு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளியின் அனைத்து மாணவர்களில் ஒரே ஒரு மாணவரைத் தவிர மற்ற அனைவரும் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.