tamilnadu

img

அருந்ததியர் உள் ஒதுக்கீடு....  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்பு!

திருச்சி:
“அருந்ததியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் ஒதுக்கீடு சரியானதே” என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியதாவது:

‘அடித்தட்டு மக்களும் அவர்க ளுக்குரிய வாழ்வியல் உரிமைகளைப் பெற்று, சமூக சமநிலையை அடைந்திடவேண்டும்’ என்கிற சிறந்த கோட்பாட்டினை மிகத் துணிவுடன் தனது தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தமிழக மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவர் மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவருடைய அறிவுறுத்தலின்படி அன்றையதுணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்து, உரிய ஆய்வுகளுக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு அரசு இதழிலும் வெளியிடப்பட்டு உள்ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை. சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக
மக்கள் எப்போதும் பெருமிதம் கொள்பவர்கள். இச்சிறப்பான கோட்பாட்டிற்கு மேலும் வலிமை சேர்க்கக் கூடியதாக அமைந்திருக்கும் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உளமார வரவேற்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;