tamilnadu

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சாவூர், ஏப்.6-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மெலட்டூர் குச்சிபாளையத் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (38). இவர் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 


சிபிஎம் கிளைக் கூட்டம் 

தஞ்சாவூர், ஏப்.6-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் வீரக்குறிச்சி மற்றும் சுக்கிரன்பட்டி சிபிஎம் கிளைகளின் கூட்டுக் கூட்டம் கே.மாதவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் கு.பெஞ்சமின், கிளைச் செயலாளர்கள் உலகநாதன், ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவது, ஏப்.10 பட்டுக்கோட்டையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவிருக்கும் பரப்புரைக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 





;