tamilnadu

img

நீர்நிலை பேரிடர் ஒத்திகை பயிற்சி

பொன்னமராவதி, மார்ச் 6- வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்புத் துறை சார்பில் புதுக்கோட்டை பொன்னமராவதி வலையப்பட்டி அடைக்கன் ஊரணியில் பொதுமக்களுக்கு நீர்நிலை பேரிடர் ஒத்திகை பயிற்சி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் ராஜா, தேர்தல் துணை வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மா.இளங்கோ தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு நீர்நிலை பேரிடர் ஒத்திகை பயிற்சி அளித்தனர். வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.