tamilnadu

img

தீக்கதிர் முகவருக்கு பாராட்டு

புதுக்கோட்டை, மே.17-புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா புதுகை வரலாறு நாளிதழின் சார்பில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாளிதழ் முகவர்களுக்கான பிரிவில் தீக்கதிர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார். தீக்கதிர் செல்வம் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக தீக்கதிர் நாளிதழின் முகவராக செயல்பட்டு வருகிறார். செல்வம், தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்து விடுவார். அங்கு தீக்கதிர் நாளிதழ் மட்டுமல்லாது ஏனைய நாளிதழ்களின் கட்டுகளும் புதுக்கோட்டையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பிரித்து அனுப்பும் பணியிலும் தன்னலம் கருதாது சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் புதுக்கோட்டை நகர் முழுவதும் தீக்கதிர் நாளிதழை கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணிக்காக செல்வத்திற்கு சிறந்த முகவருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வம் வழங்கினார். கவிஞர் தங்கம்மூர்த்தி, நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.