tamilnadu

img

ஏப்.1-ல் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைகிறது: வங்கி அதிகாரி தகவல்

மன்னார்குடி: இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி வரும் ஏப்ரல்-1ஆம் தேதி இணைகிறது என வங்கி கிளை மேலாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் இந்தியன் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி பத்மஜா சந்துரு கூறினார்.  பொங்கல் பண்டிகையையொட்டி இந்தியன் வங்கியின் கும்பகோணம், திருவாரூர் மண்டல கிளை மேலாளர்கள் சந்திப்பு சிறப்புக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்துவது குறித்தும், வங்கி மேலாளர்களை ஊக்குவிப்பது தொடர்பாகவும் நடை பெற்ற இக்கூட்டத்தில் சென்னை மண்டல கள மேலாளர் சந்திரா ரெட்டி தலைமை தாங்கினார். சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் கணேசராமன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு கலந்துகொண்டு வங்கி மேலாளர்களுக்கு வங்கியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வழங்கப்பட வேண்டிய சேவைகள், கடன்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி இணைகிறது என்றும், இரண்டு வங்கிகளும் ஒன்றாக இணைந்து இணக்கமான விதிமுறைகளையும், வங்கிகளின் நடைமுறைகளையும் உருவாக்கி வருகின்றன எனவும் கூறினார்.  இக்கூட்டத்தில் கும்பகோணம் மண்டல மேலாளர் விஜயகுமார், திருவாரூர் மண்டல மேலாளர் ராஜாமணி, துணை மண்டல மேலாளர்கள் மோகன், செல்வநாயகம், மற்றும் வங்கிக் கிளை முதன்மை மேலாளர்கள், மேலாளர்கள், மாவட்ட அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கணக்கில கலந்து கொண்டனர். 

;