tamilnadu

img

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கப் பயிலரங்கம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மண்டல பயிரலங்கம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தணிக்கையாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். சிறப்பு ஆலோசகர் சுடலையாண்டி துவக்கவுரையாற்றினார். பாபு வாழ்த்துரை வழங்கினார்.  சங்கமும், எதிர்கால கடமைகளும் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் ஆறுமுகம், ஓய்வூதியர் நேர்காணலும், கணினி பயிற்சியும் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டத் தலைவர் செந்தமிழ்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர். திருச்சி குருநாதன், கரூர் சாமுவேல் சுந்தரபாண்டியன், அரியலூர் வேலுசாமி, புதுக்கோட்டை முத்தையா, பெரம்பலூர் மாயவேலு சுந்தரேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் துளசிராமன் நன்றி கூறினார்.

;