பொன்னமராவதி, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அனைத் துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 23-ம் தேதி காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை யில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி சமவெளிப் பகுதி யில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோ சனைக் கூட்டம், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பகுருதீன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், சாத்தையா, சௌந்தரராஜன், பிச்சை, ராமசாமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தீன், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நெ.ராமச்சந்திரன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.எல்.ராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தேவேந்திரன், சேதுராமன், மாணவர் அமைப்பின் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் நாகூர் கனி மற் றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வைத்தியநாதன் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.