tamilnadu

img

புதுமண்ணியாறு கரைகளை சீரமைத்திடுக!

விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி, மே 29- தண்ணீர் வருவதற்குள் புது மண்ணியாறு பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி பகுதி யில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்களுக்கு பாசன வசதி தரும் முக்கியமான பாசன வாய்க் காலாக புதுமண்ணியாறு இருந்து வருகிறது. இந்த பிரதான பாசன வாய்க்கால் தெற்குராஜன் வாய்க்காலில் இருந்து குமரகுடி கிராமத்தில் பிரிந்து பழையாறு துறைமுகம் சென்று கடலில் கலக்கிறது.  இந்த வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து தற்காஸ் கிராமம் வரை இரு கரைக ளும் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெலிந்தும் தூர்ந்தும் போயுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் இப்பகுதியில் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே தற்பொழுது குடிமராத்துப் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த வாய்க்கால் கேட்பாரற்று கிடக்கிறது.  எனவே மேட்டூர் அணை தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே புதுமண்ணியாறு பாசன வாய்க் காலை தாண்டவன்குளம் கிராமத்தி லிருந்து தற்காஸ் கிராமம் வரை தூர்வாரி ஆழ்படுத்தி கரைகளை பலப் படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.