கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உள்ளூர் ஊராட்சியில் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. தற்பொழுது வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர் வி.செல்வகுமார் இந்த பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு உப யோகப்படுத்தும் வகையில் குடிநீர் பிரச்ச னையை தீர்த்து வைத்து பணிகளை செய்துள் ளார். இதனால் ஊராட்சி தலைவர் செல்வ குமாரை மகாவீர் நகர் நல பொறுப்பாளர் கண்ணதாசன் கலைச் செல்வம் உள்ளிட்ட பொதுமக்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டி நன்றி தெரிவித்து கௌரவித்தனர்.