சீர்காழி, மே 13-கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அருகே சாலையில் தாழ்வாக தொங்கிய நிலையில் செல்லும் மின்கம்பியை சரி செய்ய கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் அரசு ஆரம்பசுகாதார நிலையம் அருகே உயரழுத்தமின்கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. 20 மீட்டர் தூரத்துக்கு 6 மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதால் சுகாதார நிலையத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனேயே செல் கின்றனர். மேலும் சுகாதார நிலையத்திற்கு அருகே உள்ள பாசன வாய்க்கால் மதகின் மேல் அமர்ந்து சில நேரம் சிறுவர்கள் அபாயம் தெரியாமல் விளையாடும் சூழலும் உள்ளது. இது குறித்துமின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சாலையில் மிகத்தாழ்வான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பிகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.