tamilnadu

img

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரவக்குறிச்சியில் புதிய தொழிற்சாலை நிறுவப்படும்

கரூர், மே 10-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி, ராஜபுரம் ஊராட்சி, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு கேட்டு வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.பிரச்சாரத்தின் போது செந்தில் பாலாஜி பேசியதாவது, படித்த இளைஞர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் அரவக்குறிச்சி பகுதி யில் புதிய தொழிற்சாலை நிறுவப்படும். தேவைப்படும் இடங்களில் விவசாயிகள் விருப்ப ப்படும் இடங்களில் தடுப்ப ணை அமைத்து விவசாயப் பணிகள் மேம்படுத்தப்படும். அரவக்குறிச்சிக்கு தற்போது ஏன் தேர்தல் வந்தது என்பதை மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழக முதலமைச்சர் சரி இல்லை. அவர் ஒரு ஊழல்வாதி. முதலமைச்சரை மாற்றுங்கள் என மனு கொடுத்ததற்கு எனது பதவியைப் பறித்தனர். நான் அமைச்சராகப் பதவியில் இருந்த போது இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு ரூ.25 கோடியே 69 லட்சத்துக்கு தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் சொன்னதை செய்கிறேன். செய்வதைச் சொல்கிறேன். முடிந்தால் முதலமைச்சர் செய்ததை சொல்லட்டும். அல்லது செய்து முடிக்கப் போவதையாவது சொல்லட்டும். இவ்வாறு வி.செந்தில் பாலாஜி பேசினார். பரப்புரையின் போது கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.