திருச்சிராப்பள்ளி, செப்.3- திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் நிதியை குறைத்து வேலையை முடக்க கூடாது. குடும் பத்திற்கு நூறு நாள் வேலை முடி யும் வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிகண்டம் ஒன்றியக்குழு மற் றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று மணிகண்டம் யூனியன் அலு வலக முற்றுகை போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் சங்கிலிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, விதொச மாநில செயலாளர் பழநிசாமி, மாவட்ட பொருளாளர் இளங்கோ, வி.ச. மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டி யன், மாவட்ட செயலாளர் தங்க துரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகி யோர் பேசினர். விச ஒன்றியத் தலைவர் முரு கேசன், ஒன்றியச் செயலாளர் ராமு, மாவட்ட துணைத்தலைவர் சிவக் குமார், விதொச மாவட்ட தலைவர் செல்வராஜ், டிஏஆர்ஏடிடிஏசி சங்க மாவட்ட செயலாளர் கோபி நாத், ஒன்றிய தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் ஆரோக்ய ராஜ், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தங்கராஜ், அய்யாவு, பாக்கி யம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அதிகாரிகளு டன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் நூறு நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வருகிற வியாழக்கிழமை முதல் வேலை வழங்குவது. செய்யும் வேலைக்கு அளவுபடி முழுமை யாக சம்பளம் வழங்குவது உள் ளிட்டவை முடிவானது. இதை யடுத்து முற்றுகை போராட்டம் கை விடப்பட்டது.