தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சை அருகே நடவு செய்ய ஆள் பற்றாக் குறையால் 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற் பயிரை நடவு செய்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்பை யன்(48), காந்திமதி(40) தம்பதியினர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் ராஜலெட்சுமி(19), ஒரத்தநாடு அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அவ்வப்போது விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருவார். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் வயலில் ஆழ்குழாய் பாசனம் மூலம் நெற்பயிர் நாற்று தயார் செய்திருந்தனர். அந்த நாற்றுகளை நடவு செய்வதற்காக தொழிலா ளர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து தனி ஆளாக நடவு செய்ய முடிவு செய்தார். இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களில் 1 ஏக்கர் நிலத்திலும் தானே நெற்பயிர்க ளை நடவு செய்தார். இச்செயலை கண்டு அக்கம் பக்கம் இருந்த விவசாயத் தொழிலாளர்கள் அவரு க்கு உதவ முன்வந்த போதும், அன்புடன் அதை தவிர்த்துள்ளார். மாணவியின் இந்த முயற்சியை அப்பகுதி விவசாயிகள், மக்கள் பாராட்டினர். இது குறித்து மாணவி ராஜலெட்சுமி கூறியதா வது, நடவு செய்ய நாற்று தயார் நிலையில் இருந்தன. ஆள் பற்றாக்குறை காரணமாக நடவு செய்ய ஆள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மதிய த்திற்கு மேலாக 2 மணியிலிருந்து 6 மணி வரை நடவு செய்தேன். தற்போது நடவு பணிகள் முடிந்து விட்டன. நடவின் போது தந்தை மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டார். என்றார்.