tamilnadu

img

சேதமாகி 3 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத ரயில் பாலம்

நாகப்பட்டினம், ஜூன் 2-நாகப்பட்டினத்திற்கு, மேற்கே, தஞ்சாவூர்- வேதாரணியம் செல்லும் சாலையில் உள்ளது புத்தூர். 7 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலிலிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை அமைக்கும் போது புத்தூர் ரயில்வே மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வேளாங்கண்ணி, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போது ரயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக் கிடக்க வேண்டும்.கிழக்குக் கடற்கரைச் சாலை அமைந்து ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள்ளாகவே மிகப்பெரிய வெடிப்புகள் ஏற்பட்டு ஏறக்குறைய பாலமே இடிந்து விட்டது. அதன்பின் இந்த வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்துவிட்டு பெரிய தடுப்புகள் அமைத்து விட்டார்கள். உடைந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் 3 மாதத்திற்குள் உடைந்த பாலத்தைச் சரி செய்து விடுவோம் என்று கூறினார்கள். உடைந்த பாலம் இன்னும் சரி செய்யப்படாமலேயே சிதைந்து தான் கிடக்கிறது. பழையபடி, ரயில்வே கேட் முன்பு வரிசையாக வாகனங்கள் காத்துக் கொண்டு கிடக்கின்றன.