tamilnadu

img

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பது சவால் - எய்ம்ஸ் இயக்குநர்

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பது இந்தியாவுக்கும், மற்றவர்களுக்கு சவாலாக இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.

ஃபைசரின் கொரோனா தடுப்பூசி மூன்று கட்டம் சோதனைகளின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியானது மிகக் குறைந்த -70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும், குறிப்பாக கிராமங்களுக்கும் ஒரு சவாலாக இருக்கும்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குளிர் நிலையில் பராமரிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில், குறைந்த வெப்பநிலையில் குறிப்பாக சிறிய நகரங்களுக்குச் செல்லும் தடுப்பூசி வைத்திருப்பது, கிராமப்புறங்களில் ஒரு சவாலாக இருக்கும். 

நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்றாலும், மிகவும் ஊக்கமளிக்கிறது. மூன்றாம் கட்ட சோதனைகளில், 40,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது, சிலருக்கு தடுப்பூசி கிடைத்தது, சிலருக்கு போலி மருந்துகள் மட்டுமே கிடைத்தது. மேலும் அவை எவ்வாறு இருந்தன என்பதைப் பார்க்க நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். தடுப்பூசியால் 90 சதவிகிதம் செயல்திறனை காட்டியுள்ளது.

தடுப்பூசி மூலம்  3 மாதங்கள், 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் நீடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை பார்க்க முடியும். விரைவில் இது உலகம் முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்படும். கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு என நம்புவதாக., அவர் கூறியுள்ளார்.