tamilnadu

கேரளாவில்  திண்டுக்கல் மக்கள் சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

சின்னாளபட்டி, மார்ச்-29  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள அமலிநகர் பெருமாள்கோவில்பட்டி, செட்டியபட்டி ,காந்திகிராமம் தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்  சுமார் 150 பேர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காகரை பஞ்சாயத்து காக்கநாடு அருகே உள்ள வாளக்காலா என்ற ஊரில் தங்கி  கட்டடப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களில் 50 பேர் பெண்கள். கொரானோ அச்சம் காரணமாக கேரளத்தில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செட்டியபட்டி ஊராட்சி கல்லுப்பட்டியை  சேர்ந்த சித்ரா கூறுகையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து கட்டட வேலை பார்த்து வந்தோம் எங்களை எப்படியாவது தமிழ்நாட்டில்  கொண்டுபோய் சேர்த்து விடுங்கள் என்று கூறினார்.