100 நாள் வேலையை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி எரியோடு பேரூராட்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று முற்றுகையிட்டனர். போராட்டத்தில் கல்யாணசுந்தரம், மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, எம்.ஆர்.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.