நத்தம், மே 31- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத் தூர் கிராமம் பட்டிகுளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞர் மீது சிறுமியின் தாயார் பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில் நத்தம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அர வக்குறிச்சி பகுதியில் ஓட்டுநர் வேலை செய்து வரும் சந்திரன் மகன் சக்தி (25) கடத்திச் சென்றது தெரியவந்தது இதை யடுத்து சக்தியை போக்சோ சட்டத்தின் கீழ் நத்தம் காவல்துறையினர் கைது செய்தனர்.