சின்னாளபட்டி, பிப்.8- இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரு வாரியாக உதவும் எல்.ஐ.சி.யை தனி யார்மயமாக்குவது நல்லதல்ல என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. களப் புலத் தலைவரும் பொருளியல் பேராசிரியருமான இ. செல்வராஜன் கூறினார். இந்திய பொருளாதார ஆய்வ றிக்கை 2019-20 மற்றும் வரவு-செலவுத் திட்டம் 2020-21 குறித்த குழு விவாதம் காந்தி கிராம பல்கலை.யில் நடை பெற்றது. அப்போதே மேற்கண்ட கருத்து வெளிப்பட்டது. முதுகலை பொருளாதார மாணவர் கே.கே. ஸ்ருதின் வரவேற்றார். துறைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் குழு உறுப்பி னர்களை அறிமுகப்படுத்தினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல் கலைக்கழக பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஜே.ஏ. அருள் செல்வக்குமார் இந்தியாவில் பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிற்கு பின்பு நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பு குறைந்து வருவது கவலைக்குரியது. இதில் அரசின் தலையீடு தேவை என்றார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பள்ளியின் தலைவர் எம். சௌந்தர பாண்டியன் பேசுகையில் இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லாததால் எதிர் காலத்தில் ரூபாய் ஐந்து டிரில்லியன் டாலர்களை அடை வது குறித்து சந்தேகம் எழுப்பினார். பண்ணை வருமானத்தில் தொடர்ச்சி யான சரிவு, கிராமப்புற பொருளா தாரத்தில் அதிகரித்து வரும் பிரச்சனை களின் தன்மையைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பொருளாதார வளர்ச்சி அளவை அதிகரிப்பது சந்தேகம் என்றார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு குறைவாக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் வேலை யின்மையை அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்தார். மதுரை காமராசர் பல்கலைகழகப் பொருளாதாரப் பள்ளியின் தலைவர் டி. சுவாமிகண்ணன் பேசுகையில், இந்தி யாவில் பண்ணைத்துறை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தேசிய வருவாயில் அதன் பங்கு சீராக குறைந்து வருகிறது என்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. களப் புலத் தலைவரும் பொரு ளியல் பேராசிரியருமான இ. செல்வ ராஜன் பேசுகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதரத்திற்கு பெருவாரியாக உதவும் எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்குவது நல்லதல்ல என்று கூறிய அவர், இந்தியாவின் ஏற்றுமதி சந்தை பங்கு 2030 ஆண்டுக்குள் ஆறு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு வங்கி கள் சரியான நேரத்தில் முறையான கடனை அதிகரிப்பதும், பரிவர்த்தனை செலவைக் குறைப்பதும் உதவியாக இருக்கும். உலகளவில் கருப்புப் பண பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த கருப்பு சங்கிலி தொழில்நுட்பம் உதவும் என்றார். மேலும் வரவு-செலவுத் திட்டத்தில் கொடிய கொராணா வைரஸின் பரவலை தடுப்பதற்கு எந்த ஆலோசனையும் முன்னெடுக்கப்படவில்லையென்று விவாதக் குழு உறுப்பினர்கள் கவலைப் பட்டனர். முதுகலை மாணவி கே. ஜீவிதா செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முனைவர் முருகேசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார்.