tamilnadu

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு....

திண்டுக்கல்:
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும்கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வாரவிடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு சனி முதல் திங்கட்கிழமை வரை3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால்சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களில் பலர் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நடந்து சென்றும், பிரையண்ட்பூங்கா, ரோஜாபூங்கா போன்றவற்றில் உள்ள பூக்களை பார்த்தும் ரசித்தனர். மேலும் நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களான மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி, பேத்துப்பாறை அருகே உள்ள ஐந்து வீடு அருவி ஆகியவற்றை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுலாபயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.