tamilnadu

நாகர்கோவில், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் முக்கிய செய்திகள்

கடலில் குளித்த வாலிபர் பலி; ஒருவர் மாயம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       நாகர்கோவில், அக்.28- மேல்மிடாலம் அருகே கடல் சீற்றத்தை பொருட்படுத்தாமல் குளித்த வாலிபர் அலை யில் சிக்கி பலியானார். மற்றொருவர் மாயமா னார். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழையுடன் கடல் சீற்றமும் உள்ளது. கடல் கொந்தளிப்புக்கு இடையிலும் தீபாவ ளியை கொண்டாட கடற்கரைக்கு ஏராளமா னோர் வந்தனர். மார்த்தாண்டம் நல்லூரை அடுத்த கருப்புகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (22). இவர் தனது நண்பர்கள் ஜினிஸ்(16), ரிச்சு, சஜித், பாபின் ஆகியோ ருடன் மிடாலத்தை அடுத்த ஹெலன் காலனி கடற்கரைக்கு சென்றார். இங்குள்ள கடற்பகுதி ஞாயிறன்று கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கூட கடற்கரை பகுதிக்கு செல்லவில்லை. அவ ர்கள் கரையில் இருந்து சற்று தள்ளியே நின்ற னர். கடற்கரை பாறையில் நின்று கடலில் குதித்து விஜய், ஜினிஸ் மற்றும் நண்பர்கள் விளையாடினர். அப்போது ராட்சத அலை ஒன்று 5 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு கடற்கரையில் நின்ற மீனவர்கள் ஓடி வந்த னர். அவர்கள் கடலில் குதித்து வாலிபர்க ளை மீட்க முயற்சி செய்தனர். இதில் ஜினிசை தவிர மற்ற 4 பேரும் மீட்க ப்பட்டனர். அவர்களில் விஜய் உடல் நிலை கவ லைக்கிடமாக இருந்தது. அவரை உடனடி யாக ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதற்கிடையே அலை இழுத்துச் சென்ற ஜினிசை காணவில்லை. அவரை  மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாது காப்பு குழும காவல்துறையினர் சம்பவ இட த்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்  கடலில் அலை இழுத்துச் சென்று மாயமான  ஜினிசை தேடி வருகிறார்கள். திங்கன்று இரண்டாவது நாளாக தேடும் பணி நடந்தது.

நத்தம் அருகே கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்                                     
 நத்தம், அக். 28- நத்தம்  கோமணாம்பட்டி  பெரிய கண்மாய் கரைப் பகுதியில் ஒரு பெண் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாக நத்தம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணிற்கு சுமார் 30 வயதிருக்கலாம். கையில்  காளி&வீரகுமார் என பச்சை குத்தப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைத்து விவசாயிகளுக்கும்  100 சதவீதம் பயிர்க் காப்பீடு வழங்குக!  சிபிஎம்  வலியுறுத்தல் 
சிவகங்கை அக்28-  அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீ தம் பயிர்க்காப்பீடுத் தொகை வழங்கவேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது.  இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் மு.வீரபாண்டி திங்களன்று விடுத்துள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டத்தில்  ஐந்து வருடங்க ளாக விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்ப ட்டுள்ளனர். பயிர்க்காப்பீடுத் தொகை தான்  ஒரளவுக்கு விவசாயிகளுக்கு  ஆதரவாக இருக்கிறது. இதிலும் பாதிப்பை ஏற்படுத்து வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 2018-19-ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீடு தொகை அறிவிப்பில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 33 ஆயி ரத்து 339 ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்ப ட்டது. 85 ஆயிரத்து 624 விவசாயிகள் பயிர்க்கா ப்பீடு செய்துள்ளனர். வறட்சியால் விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பயிர்க்காப்பீடு நிறுவனம் முறையாக ஆய்வு  செய்யாமல் கோயம்புத்தூரிலிருந்து கொண்டு சாட்டிலைட் மூலம் கணக்கிட்டு ள்ளது. 520 வருவாய் கிராமங்களில் 184 வருவாய் கிராம விவசாயிகளுக்கு மட்டுமே 100 சதவீதம் காப்பீடுத் தொகை தருவதாக அறி விக்கப்பட்டுள்ளது. 153 வருவாய் கிராம ங்களுக்கு 25 சதவீதம் மற்ற 187 வருவாய் கிராம விவசாயிகளுக்கு குறைவான சதவீ தமே பயிர்க்காப்பீடுத் தொகை அறிவிக்க ப்பட்டுள்ளது. இதற்கு தனியார் பயிர்க்கா ப்பீடு நிறுவன கணக்கீடு முறையே காரணம். பயிர்க்காப்பீடு கணக்கீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணி ப்புக்குழு  மாவட்டத்தில் உள்ளது.  இதைக்  கண்டு கொள்ளாமல் தனியார் பயிர்க்காப்பீடு நிறுவனம்  இழப்பீடு சதவீதத்தை அறிவி த்துள்ளது. பயிர்க்காப்பீடு பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

வளரிளம் பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், அக்.28- திருவில்லிபுத்தூர் கொத்தன்குளத்தில் வான்முகில் தொண்டு நிறுவனம், மதுரை மீனாட்சி  மிஷன் மருத்துவமைன இணைந்து வளரிளம் பெண்களுக்கான இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின, வான்  முகில் திட்ட மேலாளர் அருள் தலைமை வகித்தார்.  கிராம வழிகாட்டுநர் காயத்ரி வரவேற்றார். அத்தி குளம், கொத்தன்குளம், வைத்தியலிங்காபுரம், படிக்காசுவைத்தான்பட்டி, நூர்சாகிபுரம், இடை யன்குளம், கீழபொட்டல்பட்டி, புதூர், புதுசெந்நெல்கு ளம் கிராமங்களைச் சேர்ந்த 120 வளரிளம் பெண்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர். அனிதா,  சந்திரகலா ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.