திண்டுக்கல், ஜுலை 11 திண்டுக்கல் மாவட்டம் கோபால் பட்டியில் வாரம் தோறும் சனிக் கிழமை ஆடு, கோழி சந்தை நடை பெறும். கோபால்பட்டி சுற்று வட் டார பகுதிகளான சாணார்பட்டி, கொசவபட்டி, அஞ்சுகுழிப்பட்டி, பாறைப்பட்டி, வேம்பார்பட்டி, கன வாய்பட்டி, அய்யாபட்டி, மேட்டுக் கடை, மணியகாரன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மக் கள் ஆடு, கோழிகளை விற்ப னைக்கு கொண்டு வருவார்கள். திண்டுக்கல் தேனி, கம்பம், மதுரை, வேடசந்தூர், எரியோடு, சின்னாளபட்டி, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலிருந்து வியாபாரி கள் வந்திருந்து ஆடு கோழிகளை வாங்கிச் செல்வர். கொரோனா திண்டுக்கல்லை அச்சுறுத்தி வரும் நிலையில் கோபால் பட்டியில் கிராமச்சந்தை நடை பெற்றது. சாலையில் வியாபாரி கள், மக்கள் முககவசம் இன்றி, தனி மனித இடைவெளி இல்லா மல் கூட்டம் கூட்டமாக வியா பாரத்தில் ஈடுபட்டனர்.