சின்னாளப்பட்டி, மார்ச் 18- திண்டுக்கல்லில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே போட்டியிடுவதா கக் கருதி திமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண் டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகமான கலை ஞர் மாளிகையில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச்செயலா ளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செய லாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, க.கனகராஜ், என்.பாண்டி, மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த முறை போல் மாபெரும் வெற்றி
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாள ரும், பழனி சட்டமன்ற உறுப் பினருமான ஐ.பி.செந்தில் குமார் வரவேற்றார். சிபிஎம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில், ‘‘கடந்த நாடாளு மன்றத் தேர்தலைப் போல் இம்முறையும் திமுக தலை மையிலான கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்ய தேர்தல் பணியாற்ற வேண்டும்.
கூட்டணிக் கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடை யும் வண்ணம் திமுக நிர்வா கிகள், தொண்டர்கள் அய ராது உழைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
உணவுத்துறை அமைச் சர் அர.சக்கரபாணி பேசு கையில், ‘‘திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடவில்லை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநில துணைப் பொ துச்செயலாளர் ஐ.பெரிய சாமி ஆகியோர்தான் போட்டி யிடுகிறார்கள் என நினைத்து கட்சி தொண்டர்கள் ஒவ்வொ ருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
சின்னம் வரைவது மட்டு மல்ல; அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவ தில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அனைத்து இல் லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணி யாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்’’ என்றார்.
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘கூட்டணி கட்சி யின் வேட்பாளர்களை மதிக் கக் கூடிய இயக்கம் திமுக. வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனை த்து நிர்வாகிகளையும் சந்தி த்து ஆதரவு கேட்க தொடங்கி னால் காலநேரம் செலவா கும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றி யை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த வேட்பா ளர் அறிமுகக் கூட்டத்தின் மூலம் திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தி ருப்பது அவர்களின் தேர்த லின் பணியின் வேகத்தைக் காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி ‘இந்தியா’ கூட்டணி யை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் அரசி யல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதி மன்றமே பொன்முடி அவர்க ளுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தபோது ஆளு நர் ஏன் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கி றார். இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கே காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வர், அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கர பாணி, பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி யாகும்’’ என்றார்.