திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் 20 படுக்கைகளுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதை கொரோனா வார்டாக மாற்றப் போவதாக தகவல் பரவியதையடுத்து சித்தையன்கோட்டையைச் சேர்ந்த சுமார் 200 பேர் மருத்துவமனை முன்பு திரண்டனர். கொரோனா வார்டாக மாற்ற வாய்ப்பில்லை என வட்டாட்சியர் அரவிந்த் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.