tamilnadu

டாஸ்மாக் கடைதிறப்பைக் கண்டித்து கே.பாலபாரதி தலைமையில் மறியல்

திண்டுக்கல், மே.7 திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை திறப்பைக் கண்டித்து முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலை மையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தையடுத்து 25 பேர் கைது செய்யப்பட்டனர்.  நாடு முழுவதும் கொ ரோனா தொற்று காரண மாக சமூக ஊரடங்கு அம லாக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவுசெய்ததையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கடுமையாக எதிர்த்தன. தாங்கள் இருக்கும் இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்த  அறைகூவல் விடுக்கப் பட்டது. திண்டுக்கல்லில் சிபி எம் ஒன்றியக்குழு சார்பாக  முன்னாள் எம்எல்ஏ கே.பா லபாரதி தலைமையில் சத்தி ரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக மறி யல் போராட்டம்  நடை பெற்றது.

போலீசார் போ ராட்டத்தை கைவிட வலியு றுத்தினர். ஆனால் பாலபார தியும் சிபிஎம் தொண்டர்க ளும் கேட்கவில்லை. இதனை யடுத்து போலீசாரும் கைது செய்ய மறுத்தனர். ஒரு மணி  நேரம் நடந்த மறியல் போ ராட்டத்தையடுத்து பாலபா ரதி உட்பட 25க்கும் மேற்பட்ட வர்களை போலீசார் கைது  செய்தனர். மறியலில்  கட்சி யின் ஒன்றியச் செயலாளர் தா.அஜாய்கோஸ், சரத்கு மார், பவுல்ராஜ், பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.   இது தொடர்பாக பால பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா வைரஸ் தாக்குதல் காரண மாக மக்கள் வீடுகளில் ஒரு  வேளை உணவு கூட கிடைக் காமல் பட்டினியால் வாடு கிறார்கள்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை திறந்தால் நிலைமை தலை கீழாக மாறிவிடும். நாம் எதற்காக வீடுகளில் சமூக ஊரடங்கை கடை பிடித்தோமோ அது அர்த்த மற்றதாகிவிடும். . டீக்க டையை திறந்தால் கூட சமூக இடைவெளியை கடைபி டிக்காமல் இருப்பார்கள். அத னால் கொரோனா வேகமாக  பரவும் என்பதால் தான் டீக்க டைகளை திறக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சரி யல்ல. ஏற்கனவே வருமான மின்றி இருக்கும் குடும்பங்க ளின் நிலை என்னவாகும். எனவே டாஸ்மாக் கடை களை திறப்பது தேவையற்ற தும் அவசியமற்றதும் ஆகும்  என்றார்.