tamilnadu

img

தோழர் எஸ்.பாலசுப்ரமணியம் காலமானார்

திண்டுக்கல்:
 அரசு ஊழியர் சங்க ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரான திண்டுக்கல் எஸ்.பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 72. 

அவரது மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச் செயலாளர் ஆஸாத், ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், அரசு ஊழியர் சங்கமாவட்டச் செயலாளர் முபாரக்அலி, மாவட்டத்தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார், பொருளாளர் ராஜேந்திரன், மாநிலத்துணைத்தலைவர் மங்களபாண்டி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர்  ஜான்பாஸ்டின் டல்லஸ், மாவட்டச் செயலாளர் சுகந்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர்கள்  எம்.கிருஷ்ணன், எஸ்.ராமமூர்த்தி  எம்.சுருளிவேலு உள்ளிட்ட பலர்  அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.