tamilnadu

img

தோழர் எம். சரண்குமார் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.2.5லட்சத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் வழங்கினார்.

திண்டுக்கல்லில் சமீபத்தில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் போராளியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியுமான தோழர் எம். சரண்குமார் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.2.5லட்சத்தை, செவ்வாயன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் அவரது தாயாரிடம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், வாலிபர் சங்க மாநிலத் துணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.