துணிவு திரைப்படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இன்று காலை இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்.வங்கியின் காவலாளி மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விசாரனையில் துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக கூறியிருக்கிறார்.