சென்னை, ஆக.19- சென்னையில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்திருப்ப தற்கு கண்டனம் தெரிவித் திருக்கும் திராவிடர் கழகம், தமிழக அரசு முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக் கையில்” தமிழ்நாட்டில் கொரோனா தொற்று (கோவிட் 19) குறைந்தபா டில்லை. இந்தியா முழுமை யிலும்கூட கொரோனா தொற்று நாளும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதைப் பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகளின் உத்திகளும், கையாண்ட வழிமுறைகளும் எதிர் பார்த்த பலனை அளிக்க வில்லை”என்று கூறி யுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு அதன் வருவாய்ப் பெருக்கத்திற்காக, டாஸ் மாக் விற்பனைக் கடைகளை சென்னையில் திறக்க அனு மதித்திருப்பது கண்டனத்துக் குரியது என்றும் அவர் தெரி வித்துள்ளார். “சில மாதங்களாக நாங் கள் குடும்பத்தில் சண்டைச் சச்சரவின்றி அமைதியாகக் கழித்தோம்; மீண்டும் மதுக் கடைகள் திறப்பு அந்த சூழ்நிலையை அறவே மாற்றிவிடும்; எங்களது குடி காரக் கணவர்கள் குடித்துப் பணத்தையும், உடல் நலத்தையும் விரயம் செய்வ தோடு, குடும்ப அமைதியை யும் பறித்து விடுவார்கள்’’ என்று தாய்மார்கள் ஆற்றாது அழுது கண்ணீர் விட்டுக் கதறு வது ஏனோ தமிழக அர சின் காதுகளில் விழ வில்லை? என்றும் கடுமை யாக சாடியுள்ளார்.