tamilnadu

img

குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம்: அனைத்துக் கட்சியினர் எதிர்ப்பு

திருத்துறைபூண்டி, ஜூலை 10-  திருத்துறைப்பூண்டி நகர அரசலடி குடி யிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். மிக நெருக்கமாக வீடுகள் இருக்கக் கூடிய குடியிருப்பு பகுதி என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து ஆய்வு பணியை அதிகாரிகள் நிறுத்தினர்.  மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்று திரண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன், திராவிட முன் னேற்றக் கழக நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர், மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தர், இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், திராவிடர் கழக நகர தலைவர் குணசேகரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி நகர செயலாளர் மைக்கேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொன்டனர்.

;