தருமபுரி, ஜூலை 22- மக்கள் இயக்கமாக உருவெடுத்து மழைநீர் சேகரிப்பு பணியை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மத்திய அரசின் ஜல் சக்தி இயக்க பங்கேற் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், அடுத்த 30 ஆண்டுகளில் நகரங்கள் குடிநீரின்றி வறண்டு விடும். நீரை சேமித்துவைப்பது நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் கடமை ஆகும். தரும புரி ஆயுதப்படை குடியிருப்பில் தற்பொழுது பெய்த மழையில் மேற்கொண்ட நீர்சேகரிப்பு காணொளி காண்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை தன்நிறை வோடு செய்ய வேண்டும். மேலும், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்ட பங்கள், அரசு, தனியார் கட்டடங்கள், வீடுகள் உள் ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைத்தல் மற்றும் ஆழ்துளை கிணறுகள், போர்வெல்கள் உள்ள இடங்களில் நீர் செறிவூட்டும் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகளை செய்யும் நீர்ப்பாசன கால்வாய்களில் முனைப்புடன் பணிகளை செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாக உருவெடுத்து மழைநீர் சேகரிப்பு பணியை சிறப்பாக செய்ய வேண்டும். வருங்காலங்களில் மழைபெய்வதற்கு ஏதுவாக மரக்கன்றுகள் வைத்து வளர்க்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என அனைத்து இடங்களிலும் மழை நீர் சேமிக்கும் வண்ணமாக அனைத்து பகுதிகளை யும் சீரமைக்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். மழை நீர் செறிவூட்டவும் மழைநீர் சேகரிக்கவும், ஒருங் கிணைப்புடன் பணியாற்றிட வேண்டும். வனத்துறை சார்பில் காடுகள் வளர்ப்பு திட்டம், பள்ளிகள், கல்லூரி கள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்று வைத்து வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை காளிதாசன், நபார்டு வங்கி யின் உதவி பொது மேலாளர் பார்த்தசாரதி, மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் ஆர்த்தி, வங்கி அதிகாரி கள், அரசுத் துறை அதிகாரிகள், வணிகசங்க பொறுப்பாளர்கள், தொண்டு நிறுவன பொறுப் பாளர்கள் மற்றும் அரிமாசங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.