tamilnadu

img

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை 100 சதவிகிதம் சரிபார்க்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன. 14- தருமபுரி மாவட்டத்தில் வாக் காளா் பெயா் பட்டியலை 100 சத விகிதம் சரிபார்க்க வேண்டும் என வாக்காளா் பட்டியல் பார்வையா ளர் எம்.மதிவாணன் தெரிவித்துள் ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்  வாக்கா ளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட் டம், மாவட்ட ஆட்சியா் எஸ்.மலர் விழி தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டி யல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள எம். மதிவாணன் கூறிய தாவது, தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பெயா் பட்டியலை  100 சதவிகிதம் சரிபார்க்க வேண் டும். 18வயது பூா்த்தியடைந்த தகு தியான நபா்களை கட்டாயம் வாக் காளா்கள் பட்டியலில் சோ்க்க  வேண்டும். அதே நேரத்தில், உயிரிழந்தோர், ஒன்றுக்கு மேற் பட்ட இடங்களில் பட்டியலில் பெயா் பதிவுகள் இருந்தால் அதனை நீக்கம் செய்ய வேண் டும்.கல்லூரி மாணவ, மாணவி களின் பெயா்களை இணைய தளம் வழியாக வாக்கா ளா்கள் பட்டியலில் சோ்க்கலாம்.  மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை கள் உள்ளிட்டோருக்கு பெயர் களை சோ்க்கவும், நீக்கம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு தக வல்களை ஆசிரியா்கள், அரசு அலு வலா்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதைதொடா்ந்து, பென்னா கரம் வட்டம், சருக்கல் பாறை கிரா மத்தில் வாக்காளா் பட்டியலில் சுருக்கத் திருத்தப் பணிகளையும் எம்.மதிவாணன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், அரூா் சார் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) கீதாராணி, வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) தேன் மொழி, நகராட்சி பொறியாளா் கிருஷ்ணகுமார், வட்டாட்சியா் (தோ்தல்) பாலமுருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனா்.

;