தருமபுரி, நவ.3- தமிழக அரசு பஞ்சமி நில ஆணை யத்தை செயல்படுத்த வேண்டு மென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வனின் பெற்றோர் களின் உருவ படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி அதியமான்கோட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் சனி யன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உருவப் படத்தை திறந்து வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தொல். திருமாவளவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப் பட்டு வருகிறது. ஆனால் இந்த தேர்தலை நடத்துவார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உள் ளாட்சித் தேர்தலை இவ்வளவு காலம் தள்ளிப் போட்டது சட்ட விரோதமான செயல். ஆறு மாதத் திற்கு மேல் உள்ளாட்சி அமைப்பு கள் காலியாக இருக்கக்கூடாது என்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத் தின் விதிமுறைகள் ஆகும். தமிழக அரசு அறிவித்தது போல உள் ளாட்சித் தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது எப்படி என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். இந்த வெற்றி பறித்துக் கொள்ளப் பட்ட வெற்றி, மக்களின் ஆதரவு அலையால் பெற்ற வெற்றி அல்ல. இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக கூட்டணிக்கு இடைக்கால வெற்றி, அந்தவகையில் திமுக உடனான கூட்டணிக்கு பின்னடைவு கிடை யாது என தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் ஏறத்தாழ பன்னிரண்டரை லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அறிவித்தது போல பஞ்சமி நில ஆணையத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும். எந்தெந்த மாவட் டத்தில் பஞ்சமி நிலம் உள்ளது என கணக்கீடு செய்ய தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர் ராமதாஸ், எச்.ராஜா போன்றவர்கள் பஞ்சமி நிலம் குறித்து அரசியல் ஆதாயத்திற்காக பேசிவருகிறார்கள். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அதற்கு தகுந்த நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் கல்வி கொள்கை திட்டத்தில் மும்மொழி திட்டத்தை திணிக்கும் வகையில் தான் வரையறை செய் துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் குறிப் பிட்ட 10 ஆண்டுகளில் இந்தி மொழியை பேசக்கூடியவர் களாக மாற வேண்டும் என்பதற் காகத்தான், இந்தியா முழுவதும் எல்லா மாநிலத்திலும் உள்ள மக்கள் அவரவர் தாய்மொழியை விட பொது மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை அரசியல் கொள்கையாக வைத்திருக்கின்றனர். எனவே தான் எத்தனை எதிர்ப்புகள் வந் தாலும் கூட இந்தி மொழியை திணிக்கும் முறையில் மத்திய பாஜகவினர் செயல்படும் இச் செயல் கண்டிக்கத்தக்கதாகும். பிறமொழி பேசக்கூடிய மக் களின் உணர்வுகளை காயப் படுத்தும் வகையில் உள்ளதாகவும், எல்லா மொழியிலும் பேசக்கூடிய அனைவரும் சேர்ந்துதான் இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தது உள்ளனர். இந்தி பேசும் மக்கள் மட்டுமே தியாகம் செய்ய வில்லை. எனவே அனைத்து மொழி களை சார்ந்த தேசிய இனத்தவர் போராடினார்கள் என்பதை மத்தியில் ஆட்சி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி மாவட்டத்தலைவர் கோ.வி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் த.ஜெயந்தி மாவட்ட துணை செயலாளர் மின்னல்சக்தி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் தா.கு.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.