தருமபுரி, அக்.31- மருத்துவர்களின் காலவரை யற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. மத்திய அரசு மருத்துவர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளி களின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர் பணியிடங்களை உரு வாக்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு மருத் துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் அக்.25 முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் 7ஆவது நாளாக இப்போராட்டம் தொடர்ந்தது. தருமபுரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்ட விளக்க கூட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்களான மருத்துவர்கள் சீனி வாசன், கெளரிசங்கர், வெங்கட் டேஷ், அபினேஷ், ஸ்டாலின் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கப் பேசினர். இப்போராட்டத்தில் 400க்கும் மேற்பட்ட மருத்து வர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை வளா கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது சுகா தாரம் நோய் தடுப்பு துறை சங்கத் தினரும் போராட்டத்தில் பங்கேற் றனர். இதேபோல், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநில செயலாளர் எ. ராதிகா, மாவட்ட செயலாளர் ஐ. ஞானசௌந்தரி, மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, கே. ராஜாத்தி, ஜி.கவிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்திப் பேசினர்.