தருமபுரி, ஜூலை 17- பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மையினரை பின்னுக்கு தள்ளும் தேசிய புதிய கல்விக் கொள் கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பள்ளி கல்வி பாது காப்பு இயக்க பொறுப்பாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். தோழி மற்றும் தருமபுரி மாவட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் தேசிய புதிய கல்வி கொள்கை வரைவு குறித்த கருத்தாய்வு கூட்டம் புதனன்று தருமபுரி எபிரோன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தர்மலிங்கம் தலைமை வகித்தார். செல்வி வரவேற்றார். தோழி கூட்டமைப்பு தலைவர் சங்கர் துவக்கி வைத்து பேசினார். இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பள்ளிகல்வி பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் ஜே.கிருஷணமூர்த்தி, பேராசிரியர் சிவக்குமார், மக்கள் கண்காணிப்பகம் தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்ராஜா, கூட்டமைப்பு நிர்வாகி கள் தாமஸ், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக, பள்ளிகல்வி பாது காப்பு இயக்க பொறுப்பாளர் ஜே. கிருஷணமூர்த்தி பேசுகையில், உலக அளவில் 191 நாடுகளில் இந்தியா 145 இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்த சூழலில் தான் மத்திய பாஜக மோடி அரசு தேசிய புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியிட்டுள்ளது. இந்த கல்விக்கொள்கையில் வர்ணசிரமம், சமஸ்கிருதம் போன்றவற்றை திணித் துள்ளனர். இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்தால் கல்வியில் மேலும் பின்னுக்குதள்ளப்படுவோம் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உலக நாடுகள் குழந்தைகளுக்கு 5 வயதிற்கு பிறகுதான் கல்வி பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் என சொல்கிறது. ஆனால், பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை 3 வயது குழந்தை பருவத்தி லேயே தொழிற்கல்வியை பயில வேண்டும் என கூறுகிறது. இன்று தமிழகத்தில் 1,748 அரசு பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும், தமிழக அரசு தெரி வித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரம் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் இந்தியா முழுவ தும் 10 லட்சம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. கல்வி தரம் குறைவதற்கு ஆசிரியர் காரணமல்ல, ஆசிரியர் பற்றாக்குறையே காரணமாகும். கல்வி உரிமை சட்டத்தின்படி 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், அதற்குமேல் 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த விகிதாச்சார முறை அரசு பள்ளிகளில் இல்லை. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கல்விக்கான ஆசிரியர்கள், கல்வி உபகரணங்கள்,கட்டமைப்பு வசதிகள் என எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு செய்து கொடுப்பதில்லை. அரசே தனி யார் பள்ளியில் மாணவர்களை சேர ஊக்குவிப்பதாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் முறையை அறிவித் துள்ளது. பள்ளி படிப்பிலேயே 3 பொதுத்தேர்வு வந்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். டீச்சிங்க்கு பதி லாக தனியார் பள்ளிகள் கோச்சிங் என சொல்லி நீட் கோச்சிங் போன்று கட்டண கொள்ளை நடக்கும். நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை பள்ளி மாண வர்களுக்கு உருவாகும். இந்த முறையை அமல்படுத்தினால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனம் மற்றும் சிறுபான்மை மக்களை பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குலத்தொழில் முறைக்கு தள்ளி விடும். இதனால் இந்த சமூகம் கல்வி யில் பின்னுக்குபோகும். மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் கல்விக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறது. மத்திய அரசு கல்வி அதிகாரத்தை குவிக்கிறது. கல்வியை வணிகமய மாக்குகிறது. கல்வியில் ஒற்றைச் கலாச்சாரம், மதத்தை, சாதியை திணிக் கிறது. குறிப்பாக மத்திய அரசின் பாடத் திட்டத்தில் ஒரு சாதி மதத்தை உதாரணப்படுத்துகிறது. பாடத்திட் டமானது மதச்சார்பின்மையாக இல்லை. ஆகவே, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இந்திய நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் இருக்கிறபோது ஒரே மாதிரியான கல்வி எப்படி பொருந் தும். எனவே மத்திய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.