tamilnadu

img

மாணவர்களின் ஆர்வத்திற்கேற்ப ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்

தருமபுரி, பிப்.13- மாணவர்களின் ஆர்வத்திற் கேற்ப ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி அறிவுறுத்தி உள் ளார்.  தருமபுரி மாவட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தில் பிற்படுத் தப்பட்டோர், மிகபிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர்  நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு  மற்றும் பயிற்சித் துறை இணைந்து நடத்தும் 10,12ஆம் வகுப்பு மாண வர்களுக்கான தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தலைமை யில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பேசிய தாவது, மாணவர்களிடம் உள்ள ஆர்வத்தின் அடிப்படையில் ஆசிரி யர்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து, அத்துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் உயரதேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இதேபோன்று தங்கள்  பிள்ளைகளிடம் உள்ள தனித் திறன்களை பெற்றோர்கள் கண்ட றிந்து, மற்ற மாணவர்களோடு ஒப்பிடாமல் அவர்கள் திறனுக் கேற்றவாறு ஊக்கப்படுத்த வேண்டும்.  மாணவ, மாணவிகள் தங்கள் திறன்களை மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர் களுக்கு தன்னால் முதல் மதிப்பெண்  பெற இயலவில்லை என்ற தாழ்ந்த  மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.   மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை  சார்பில் பல்வேறு வழிகாட்டுநெறி முறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வரு கிறது. அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக்கணினிகளை அறிவு  சார்ந்த வளர்ச்சிக்கு மாண வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மொபைல் போன்களை பயன் படுத்தி மாணவர்கள் தவறான பாதைகளுக்கு சென்று விடக் கூடாது.  அறிவுசார் தொழிற்நுட்பங் களுக்கு மட்டுமே அதை பயன் படுத்த வேண்டும். மாணவர்கள் சிறந்த நட்பு வட்டாரங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் உயர்ந்த நிலையை  அடைய முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல  இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) கோவை ஆ.லதா,  மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலக உதவி இயக்குநர் ம.மகேஸ் வரி, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவர்  அ.ஐயப்பன், இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர் உ.முரளிதரன், வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சகீலாபானு மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.