தருமபுரி, பிப், 9- தருமபுரியில் அரசு மாணவிகள் விடுதி யிலிருந்து மாயமான 10 ஆம் வகுப்பு மாண வியை காவல் துறையினர் தேடி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பெரும்பாலையில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகி றது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி பகுதியைச் சேர்ந்த மாணவி அவ்விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இம் மாணவி சனியன்று காலை உணவு வேளை யின்போது விடுதியில் இருந்துள்ளார். ஆனால், மதிய உணவிற்கு வராததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் கவிதா மாணவியைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது மாணவி காணவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவிதா பெரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.