நுாறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவு படுத்தக்கோரி தருமபுரியை அடுத்த கடத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டச் செயலா ளர் எம்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத் தில் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டப் பொருளா ளர் இ.கே.முருகன், கே.கோவிந்தசாமி, செல்வம், விவசாயி கள் சங்க வட்டச் செயலாளர் தீர்த்தகிரி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கிருஷ்ணவேணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.