தருமபுரி, அக்.19- தமிழகத்தில் புதியதாக தொடங் கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத் துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க் கையை தொடங்க வேண்டும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் மதிப்பீட் டில், நவீன கழிப்பிட கட்டிடம் கட்டு வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
இதற்கான பணி துவக்க நிகழ்ச்சியானது சனியன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி., செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ராமநாதபுரம், விருது நகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக் கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ் ணகிரி, நாகப்பட்டிணம், அரிய லூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட் டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள் ளன. தற்போது, 11 அரசு மருத்து வக் கல்லூரிகளுக்கும் தேவையான கட்டிட வசதிக்கான கட்டுமான பணி கள் நடந்து வருகின்றன. இந்நிலை யில், நடப்பு கல்வி ஆண்டிலேயே அந்த 11 புதிய அரசு மருத்துவக் கல் லூரிகளிலும் மாணவர் சேர்க் கையை தொடங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதனால், ஏராளமான மாணவ, மாணவியர்க ளுக்கு இந்தாண்டே மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக் கும்.
அரசு மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக ளில் மருத்துவ படிப்பிற்க்கான கல் லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்த வேண்டும். மத்திய அரசுக்கு உரிய வகையில் தமிழக அரசு அழுத் தம் கொடுத்து, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.